தெல்லிப்பழையில் - கனடாவில் இருந்து வந்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு! Tamillk news

 

tamillk news

யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து வருகை தந்த நபரொருவர் திடீரென கீழே விழுந்து உயரிழந்துள்ளார்.


யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரி ஒன்றுகூடலில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபரே நேற்று முன்தினம் (26) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (வயது 61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே ஆவார்.

தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மகாஜனக் கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.



அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது . திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Jaffna news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்