இந்தியாவின் கேரள மாநிலம், களமசேரி மாகாணத்தில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில், கிறிஸ்தவப் பிரிவினரின் ஆசீர்வாத சேவை மற்றும் மத மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தொடர் வெடிப்புகள் நிகழ்ந்தன.
இது மூன்று குண்டுவெடிப்புகள் என்று போலீசார் பின்னர் தெரிவித்தனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட பெண் ஒருவர் குண்டுவெடிப்பில் பலியானார். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 45.
வெடிவிபத்தின் போது, 2,000க்கும் மேற்பட்டோர் மாநாட்டு மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, 48 வயதான டொமினிக் மார்ட்டின் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளார். குண்டுவெடிப்புக்குப் பிறகு அவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
ஆசீர்வாத சேவை மற்றும் மத மாநாட்டை நடத்திய பிரிவைச் சேர்ந்தவர் டொமினிக் மார்ட்டின் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, புதுடெல்லியிலும் பாதுகாப்பை பலப்படுத்த டெல்லி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
indian tamil news