திருமண விருந்தில் இறைச்சி சாப்பிட்ட யுவதி பரிதாபமாக உயிரிழந்தார்! tamillk news

 

திருமண விருந்தில் இறைச்சி சாப்பிட்ட யுவதி பரிதாபமாக உயிரிழந்தார்! tamillk news

திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் இறைச்சி உள்ளிட்ட பல வகை உணவுகளை உண்ட பின்னர் திடீரென சுகவீனமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஆனமடுவ நகரைச் சேர்ந்த இருபது வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய பிள்ளையான இச்யுவதி பாடசாலை நடவடிக்கைகளின் பின்னர் பல்வேறு சமூக செயற்பாடுகளில் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புத்தளம் நகருக்கு அருகில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட குறித்த யுவதி, இவ்வாறான உணவுகளை உண்டதால் தனக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.




ஒவ்வாமை ஏற்பட்ட யுவதி சில நிமிடங்களில் ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்