பேருந்துடன் ஜீப் மோதி கோர விபத்து! பேருந்தின் சாரதி, நடத்துநர் தப்பியோட்டம்! tamillk news

 

tamlllk news


நுகேகொடையில் பஸ் ஒன்றும் ஜீப் ஒன்றும் மோதிக்கொண்ட சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. 


இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஹோமாகமவிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது முன்னால் வந்த ஜீப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து சமிக்ஞை விளக்கு எரிந்த நிலையில் பேருந்தை ஓட்டுநர் செலுத்தியுள்ளதால் இந்த  விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்