பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு ! tamillk news

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு ! tamillk news


பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் 21 படுகாயம் அடைந்தனர்.


பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள போண்டா பஜார் பகுதியில் உள்ள டாங் அட்டா என்ற இடத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.


விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது.


இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்