நகைச்சுவை நடிகர் 'போண்டா மணி' திடீர் உயிரிழப்பு! tamil cinema

 ஈழத்தில் மன்னாரில் பிறந்து தமிழகதிற்கு  புலம்பெயர்ந்த நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  

tamil cinema


வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


தற்போது இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அறிமுகம் 

1991-ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி. வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேலும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் போண்டா மணி நடித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில்

சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட  நடிகர் போண்டா மணி, சென்னையில் உள்ள  மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 


அத்துடன், அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்து வந்துள்ளனர்.

சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்

இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணியை , மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 




மேலும், அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.


செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள் Join Now


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்