அரச வங்கியொன்றில் பணத்தை மோசடி செய்த நபர் கைது!

 (srilanka tamil news-tamillk) அரச வங்கி ஒன்றின் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபா பணத்தை மோசடியாப் பெற்ற நபர் தியதலாவை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச வங்கியொன்றில் பணத்தை மோசடி செய்த நபர் கைது!


பதுளை - தியத்தலாவை பிரதேசத்தில் உள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்திலிருந்தே குறித்த நபர் பணத்தை மோசடியாக பெற்றுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



காவல்துறையினரால் மேலதிக விசாரணை

பதுளை ஹல்தும்முல்ல பிரதேசத்தை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலிருந்தே குறித்த சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்