யாழில் இருந்து பயணித்த பேருந்து கிளிநொச்சியில் விபத்து!

 கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

kailinochchi bus accident


குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.




விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளது.

விசாரணை

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்