முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ் நாட்டவருடைய சடலம்!

 முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையது என  இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

mullaitivu,


முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.


சடலம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த சடலத்தை பரிசோதனை செய்துள்ளனர்.



இதன்போது சடலத்தில் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் குறித்த சடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என இனம் காணப்பட்டுள்ளது.




குறித்த சடலத்தினை மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்குமாறும், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்