மரக்கறிகளுடன் வீதிக்கு இறங்கி மக்கள் போராட்டம்!

 (moothur tamil news-tamillk) வட்வரி அதிகரிக்கப்பட்டமைக்கும், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் பிரதான வீதியின் முன்பாக இன்று(18) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

moothur tamil news-tamillk


குறித்த ஆர்ப்பாட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதன்போது நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்புச் செய்யப்பட்டதை வலியுறுத்தும் வகையில் மரக்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

எதிராக சுலோகங்கள்

அத்தோடு வரி அதிகரிப்பைக் கொண்டு வந்த , ரணில் அரசாங்கத்திற்கு எதிராக சுலோகங்கள் ஏந்தப்பட்டு கோசங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்