ஜப்பானில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறக்கிய நிலையில் முழுமையாக தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஓடுபாதையில்
JAL 516 என்ற விமானத்தில் 380 பயணிகள் பயணித்துள்ளனர். இது டோக்கியோவின் ஹனிடா விமான நிலையத்தில் தரை இறங்கிய போது ஓடுபாதையில் தீப்பற்றிக்கொண்டது.
இந்த விமானம் தரையிறங்கிய பின்பு அங்கிருந்த வேறொரு விமானத்தின் மீது மோதியிருக்கலாம் ஜப்பான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் JAL 516 விமானம் ஹொக்காய்டோவின் ஷின்-சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
world-news