கொழும்பில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட மற்றுமொரு துப்பாக்கி சூடு!

 கொழும்பில் ஜிந்துபிட்டிய பகுதியில் இன்று (24) 9 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

srilanka tamil news-tamil lk news


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் 

அதேவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



ஆட்டுப்பட்டித் தெரு காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜிந்துபிட்டிய, ஜிந்துபிட்டிய வீதி பகுதியில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்