(vavuniya tamil news-tamillk) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள்,மருந்தாளர்கள் ,தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று(16) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் பணிப்புறக்கணிப்பு
சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த11ம் திகதி பணிப்புறக்கணிப்பில்ஈடுபட்டிருந்த போதிலும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று மீண்டும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவு , மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |