(jaffna tamil news) சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ள நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விட்ட சம்பவம் தாயகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் இருந்து ஏ-09 வீதி வழியாக எடுத்து வரப்பட்ட எடுத்துவரப்பட்டு,
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் அஞ்சலி இடம்பெற்று தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
கண்ணீருடன் அஞ்சலி
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பூதவுடலுக்கு, சாந்தனுடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




