நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்.
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஸ்தீரத்தன்மையில் இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேசிய வருமானம், அரச நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
உலக நாடுகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற போதிலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த வருட இறுதிக்குள் அந்திய செலவாணி 7 வீதமாக அதிகரிக்கும் .
2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 87% ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
வருமானம் குறைந்த மக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை முன்னெடுப்பதுடன், 2026 ஆம் ஆண்டு மீண்டும் அஸ்வெசும பெறுவோரை மீளாய்வு செய்யவுள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, நாட்டுக்கு தேவையான பிரதி பலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு ஈ சேவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2026 மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படும்
அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே 3 கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் பொருளதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.
2025 ஆம் ஆண்டு 823 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
2026 ஆம் ஆண்டு அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம்.
குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது என்னை ஹிட்லர் என்று விமர்ச்சிக்கின்றனர்.
மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொருளாதார பிரதிபலன்கள் சமமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் முக்கிய நோக்கமாகும்.
ஏற்றுமதியை இலக்காக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.
2025 ஆம் ஆண்டு 430 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டுள்ளது.
எவரும் கடனை செலுத்துவது தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை.
2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
பொய்யான பரப்புரைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தேசிய கடன் சேவை 760 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
2028 ஆம் ஆண்டிலும் நாங்களே ஆட்சியில் இருப்போம் நாங்களே கடனை செலுத்துவோம்
2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடம் இதுவரை 1373 மில்லியன் டொலர் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கிராமிய வறுமையை நீக்குவதற்கு தேசிய வருமானத்தின் பிரதிபலன்களை கிராமிய மட்டங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்போம்.
டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். அதற்கு பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அரச ஏற்றுமதி 4 சதவீத்தால் அதிகரிப்பதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
வேலையின்மை 4.5 இல் இருந்து 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பங்குச் சந்தைகள் பாரிய வளர்ச்சியை காண்பித்துள்ளன.
அரசியல் தலைவர்கள் தவறுகள் இழைத்தால் மக்களே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாட்டை உருவாக்கியுள்ளோம்.
அனைவரும் தங்களுடைய ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி செலுத்தும் சூழலை உருவாக்கியுள்ளோம். அதனாலேயே வரி வருமானம் அதிகரித்துள்ளது.
நேரடி மற்றும் மறைமுக வரி 75 - 25 சதவீதத்தில் இருந்து 40 - 60 சதவீதம் வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பு துறைமுக சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் சர்வதேச முதலீடுகள் இலங்கையில் இருந்து கை நழுவிச் செல்வதை தடுக்க முடியும்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு தேசிய உற்பத்தியை 20 சதவீதமாக முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை.
முதலீடுகளை பாதுகாக்கும் நோக்குடன் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது - ஜனாதிபதி
பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் கொண்டுவரும் முதலீடுகளுக்கு ஏற்ப வதிவிட வீசா வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
முதலீட்டு வலயங்களுக்கு அண்மித்த சேவைகளுக்காக மேலும் 1000 பில்லின் ரூபாய் ஒதுக்கீடு
காணி தகவல் உள்ளிட்ட மத்திய டிஜிட்டல் சேவைக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
திகன மற்றும் நுவரெலியாவை மையப்படுத்தி புதிய இரண்டு தொழிநுட்ப முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
தேசிய ஏற்றுமதி வளர்ச்சிக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
தேசிய தனி பொருளாதார மையம் உள்ளிட்ட முதலீடுகளுக்காக 2500 மில்லியன் ரூபாய்
தொழிற்சாலை வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு



