காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு உயிரை மாய்த்த இளைஞன்! யாழில் துயரம்...! Jaffna news

 

jaffna news-tamil lk news

யாழ்ப்பாணம் (Jaffna) இளவாலைப் பகுதியில் காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.


இதன்போது இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் யுவதியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் உயிர்மாய்த்துள்ளளார்.


இந்நிலையில், யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்