(srilanka tamil news) நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பது போன்றவற்றைக் குறைக்கும் விசேட செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த மூன்று மாத கால இலக்கு வழங்க பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து இதற்கான செயற்திட்டத்தை மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு நேற்று பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசேட நடவடிக்கைக்காக பொலிஸ் பிரிவுகளில் 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களுக்கு வெளியே நெடுஞ்சாலை கடமைகளில் உடனடியாக ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குற்றச் செயல்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய சமூகத்தையும் சூழலையும் உருவாக்குவதே பொலிஸாரின் தொலைநோக்குப் பார்வையாகும்.
அவ்வாறான நோக்கமுமான போதிலும் பொலிஸாரால் அந்த தொலைநோக்குப் பார்வையை அடைய முடியவில்லை என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.