(Jaffna tamil news) யாழ் பலாலி வீதியில் சேவையில் ஈடுபடும் சாரதி மற்றும் நடத்துனரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.