திருகோணமலையில்-இன்று அதிகாலை கோர விபத்து! 6 வயது சிறுமி மரணம்..! - சிறுவன் படுகாயம்

 திருகோணமலை(Trincomalee) - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில்   சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


tamil lk news

அத்தோடு, இச் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

 வைத்தியசாலையில் அனுமதி

இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

tamil lk news


யாழ்ப்பாணம் - பருத்தித்துறையைச் சேர்ந்த  கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியுள்ளது.


எனினும் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.


  • புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிப்பு!
  • மீண்டும் அதிகரிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம்!
  • திடீரென உட்புகுந்த கடல் நீரால் பதற்றம்..! - அச்சத்தில் மன்னார் மக்கள்..!


  • உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


    சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

    (Trincomalee Tamil News......)

    புதியது பழையவை
    மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்