பேருந்து மோதியதில் 10 வயது மாணவி பலி:சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

 கண்டி(Kandy) - கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து மோதி பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ளார்.


இந்தத் துயரச் சம்பவம் நேற்று (22) காலை இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவியே உயிரிழந்துள்ளார்.


பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தானது, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் மாணவி மீது மோதியுள்ளது.


இதன்போது படுகாயமடைந்த மாணவி குருந்துவந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.



மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருந்துவந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்