வெளிநாட்டில் கணவன் இரண்டு பிள்ளைகளையும் தனியாக வீட்டில் விட்டு இளம் தாய் காதலனுடன் ஓட்டம்

 குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 7 வயது மகளையும் 2 வயது ஆண் குழந்தையையும் பாதுகாப்பின்றி வீட்டில் விட்டுவிட்டு இரகசியமாக அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாய் வீட்டில் விடப்பட்ட 2 பிள்ளைகளையும் பாதுகாப்பிற்காக தங்களின் பொறுப்பில் எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தனது 2 பிள்ளைகளை வீட்டில் பாதுகாப்பின்றி விட்டு, கொடுமைப்படுத்தி, யாரிடமும் சொல்லாமல் மறையற்ற காதலடன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்நிலையில் குறித்த பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த பெண்ணின் கணவர் 5 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும் அவரது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரிடம் முறைப்பாடு

நேற்று முன்தினம் மாலை வீட்டில் 2 பிள்ளைகள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு வீட்டுக்கு அருகில் வசிக்கும் இந்தப் பெண்ணின் உறவினர் தகவல் கேட்டதையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


2 பிள்ளைகளும் பட்டினியால் வாடி வந்ததாக கூறப்படுகிறது. 2 பிள்ளைகளின் தாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபரும் அயலவர் என பொலிஸார் தெரிவித்தனர்.



இவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்