வவுனியா(Vavuniya) மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றையதினம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மாவட்டத்தின் இடம்பெற்ற பேரிடர் தொடர்பாகவும், நிவாரண நலன்புரி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இக்கூட்டத்திலே கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் (Deputy Minister of Cooperative Development) உப்பாலி சமரசிங்க, வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செ.திலகநாதன், ரிசாட்பதியுதீன், து.ரவீகரன், மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
Vavuniya News


