கொழும்பு(Colombo) – பொரளை பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (21.5.2025) காலை தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மரம் சரிந்து வீழ்ந்தமையினால் அந்த பகுதியில் பயணித்த வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வாகன நெரிசல்
இதையடுத்து குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதில் வீதிக்கருகில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் விளம்பரப் பலகை சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவரும் பாதிக்கப்படவில்லை. அருகிலிருந்த சில கடைகளின் மேற்கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன.
(Srilanka Tamil News.....)



