கனடா செல்ல இருந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி.....!

 யாழ்ப்பாணம் (Jaffna)- மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடா செல்ல இருந்த இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து சம்பவம் நேற்று  இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி - புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது.  


அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர்  மதிலுடன் மோதிய விபத்தில்  சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.

துயரச்சம்பவம்

சம்பவத்தில்  சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த  வயது 22 என்ற இளைஞரே  உயிரிழந்தவர் ஆவார்.


குறித்த இளைஞர் நாளைய தினம் கனடாவுக்கு பயணமாகயிருந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.




சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில்   வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை  சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Jaffna Tamil News.......)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்