காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்...! யுவதி எடுத்த விசித்திர முடிவு...!

 மட்டக்களப்பு(batticaloa) மண்டூர் தெற்கு பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய யுவதியொருவரின் காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் குறித்த யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.


இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

tamil lk news


உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியிருந்தார்.


அதேவேளை, உயிரிழந்த யுவதி கடந்த 2 வருடங்களாக மட்டக்களப்பிலுள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய  யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 காதல் தொடர்

இந்நிலையில், ஏற்கனவே யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்த இளைஞன்,   வீட்டிற்கு வந்த யுவதியை மீண்டும் காதல் தொடர்புகளை மேற்கொண்ட நிலையில் அதனை யுவதியின் தாயார் கண்டித்துள்ளார்.


இதனை  அடுத்து வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி சில நிமிடங்களில் மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.


இவ்வாறு வீட்டிற்கு வந்த யுவதி,  வீட்டினை சுத்தம் செய்த பின்னர், தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் உடனடியாக  குறித்த யுவதி, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

 மரண விசாரணை

யுவதியின் மரணம் தொடர்பில்  கல்முனை  நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில்  விசாரணைகள் இடம்பெற்றது.




அத்துடன்  குறித்த  மரணமடைந்த யுவதியின்  பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு  பின்னர்  சடலம்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Srilanka Tamil News....)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்