சாவகச்சேரியில் டிப்பருடன் மோதுண்ட இளம் குடும்பஸ்தர் பலி...! Jaffna News

tamil lk news


யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி - நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து சம்பவம் இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் வீதியில் நடந்து பயணித்த குடும்பஸ்தரே இவ்வாறு மோதுண்டு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் குருணாகலையை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna Tamil News


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்