வித்தியாசமான முறையில் புதையல் தோண்ட முயற்சித்த ஐந்து பேர் கைது!

 புத்தளம் கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் இன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது விளக்கு ஏற்றி பூஜை செய்த பின்னர் புதையல் எடுப்பதற்கு தோண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிவித்தனர்.

tamil lk news



இதன்போது நிகாவெரெட்டிய, வித்திக்குலிய மற்றும் நவகத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tamil lk news


புதையல் தோண்டுவதகு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு மற்றும் பூஜைக்கு பயன்படுத்திய விளக்கு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.



மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்