உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு

 அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்தபடி, இன்று(16)  இரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஒரு தட்டு சோறு மற்றும் கறி,  மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை  குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

tamil lk news


மேலும் ஒரு கப் சாதாரண தேநீர் ரூ. 5.என குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் புதிய விலைகள் பின்பற்றப்படாவிடில் அல்லது காட்சிப்படுத்தப்படாவிட்டால் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) முறைப்பாடு செய்யுமாறு சங்கம் கூறியுள்ளது.




மேலும், கீரி சம்பா அரிசி, சம்பா அரிசி, முட்டை மற்றும் கோழிக்கறி ஆகியவற்றின் விலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துமாறு சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 




அரசு அவ்வாறு செய்தால், நுகர்வோருக்கு கூடுதலாக 25 சதவீதம் விலை குறைப்பு வழங்கப்படும் என சங்கம் உறுதியளிக்கிறது.


Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்