அரச அலுவலகத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி...!

 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை(Trincomalee) - நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tamil lk news


கடந்த மூன்று நாட்களாக நிலாவெளி பகுதியில் நீர் விநியோகம் முறையாக இடம்பெறவில்லை என தெரிவித்து, வாடிக்கையாளரான பெண்   ஒருவரினால் குறித்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


எனினும் அதற்கு உரியப் பதில் வழங்கப்படவில்லை எனவும் அதனை வினவியதற்காகத் தாம் தாக்கப்பட்டதாகவும் அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார்.




இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 2 அதிகாரிகளையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்கவுக்கு பணித்துள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.


Trincomalee Tamil News




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்