காற்று மற்றும் மழையுடன் கூடிய வானில - மீனவர்கள் அவதானமாக செயற்பட அறிவுறுத்தல்!

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

tamil lk news


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 50-55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.



நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் அவதானமாக செயற்பட  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்