ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்,
இவ்வருட உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அண்ணளவாக 27 அங்குல நீளம் கொண்டது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், அரச நிறுவனங்களுக்கு தபால் மூல வாக்குகள் விநியோகம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Srilanka Tamil News



