வடக்கு மக்களுக்கு நள்ளிரவுக்கு பின் கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

tamil lk news


 இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள வானில் வெற்றுக் கண்ணுக்குத் தெரியும் வகையில் விண்கல் மழை ஒன்று தோன்றும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.


பெர்சியஸ் விண்மீன் கூட்டத்திற்கு அருகில் விண்கல் மழை தோன்றியதால் விண்கல் மழை பெர்சியஸ் என்று அழைக்கப்படுகிறது.



கடந்த ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஒகஸ்ட் நடுப்பகுதி வரை இந்த விண்கல் பொழிவு காணப்படுவதுடன், இன்றையதினம் (11-08-2024) நள்ளிரவுக்குப் பின்னர் அதன் உச்சம் ஏற்படும்.



ஒரு மணித்தியாலத்தில் சுமார் 100 விண்கற்களை காண முடியும் எனவும், சமவெளிக்கு சென்று தடையின்றி வடக்கு மக்கள் பார்வையிட முடியும் எனவும் வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்