நாட்டில் எதிர்வரும் சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை!

tamillk.com


எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக வீசக்கூடும் என்பதோடு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டை சூழ உள்ள கடற்பரப்புகளிலும் காற்றானது வடக்கு திசையில் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் இதன் போது கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மன்னாறில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பரப்புகளிலும், அம்பாந்து ஓட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளிலும் கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும்.

மேலும் அம்பாந்துட்டையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரை கடற்பரப்புகளில் மழை பெய்வதோடு நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடப்பரப்புகளிலும் பிற்பகல் அல்லது இரவு வேலைகளில் மழை பெய்யும் எனவும் வளிமண்டலையால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது ஏற்படும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்