நாட்டு மக்களை மறு அறிவித்தல் வரை இந்த இரு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்!

 

tamil lk news

நாட்டு மக்களை மறு அறிவித்தல் வரை இலங்கையர்கள் லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவிற்கு (Syria) செல்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இந்த பயண அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


தற்போது இரு நாடுகளிலும் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், தங்குமிடங்களுக்கு வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.




பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




அதற்காக slemb.beiruit@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தப்பட உள்ளதுடன், மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


சனத் பாலசூரிய - 0094 771102510


பிரியங்கி திஸாநாயக்க - 0094 718381581


ஃபஹத் ஹவ்வா - 00961 81485809


அல் ட்ராபி - 00963 944499666, 00963 833863 90






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்