வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு விரிகுடாவில், தாழமுக்கம் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம், எதிர்வரும் மணித்தியாலங்களில், வடக்கு ஆந்திரா மற்றும் இந்தியாவின் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த கடற்பரப்புகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Srilanka Tamil News