சுன்னாகம் பொலிஸார் நால்வர் அதிரடியாக பணியிடைநிறுத்தம்!

 

tamil lk news

பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் -(Jaffna)  சுன்னாகம் பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


அதோடு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வததாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.


சுன்னாகம் பொலிசார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.




இவ்வாறான பின்னணியிலேயே சம்பவம் தொடர்பில் மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


குறித்த பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


மேலும் குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது காண்டினங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்