பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று தேசிய மக்கள் சக்தி பெரும்பாண்மை பெற்றுள்ளது.


இதற்கமைய, பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளையதினம் இடம்பெறவுள்ளது.

tamil lk news


நேற்று முன்தினம், 21 அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், அவர்கள் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதன்போது, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




இதேவேளை, பத்தாவது நாடாளுமன்றத்தின் சபை முதல்வராகப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில், கன்னி அமர்வின் போது சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், 10ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21ஆம் திகதி முற்பகல் 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.




அன்றைய தினம் முற்பகல் 11:30 மணியளவில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்