சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் : 400000 மக்கள் வெளியேற்றம்!

 

tamil lk news

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல் காரணமாக ஏறக்குறைய 400000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மான்-யி சூறாவளி மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிபைன்ஸின் முக்கிய இடங்களை தாக்கியதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து சாத்தியமான பேரழிவு குறித்து எச்சரிக்கைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தீவுக்கூட்டத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியான வடக்கு லூசோன் முழுவதும் காற்று வீசியதாகவும் கடலோர பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சூறாவளி மரங்கள் மற்றும் மின் கம்பங்களை வீழ்த்திய பிறகு Catanduanes மாகாணம் முழுவதும் மின்தடை ஏற்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.


மேலும் முந்தைய புயல்களால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு கூடுதலாக எத்தனை வீடுகள் சேதமடைந்துள்ளன என்பதை பேரிடர்-மறுமொழி குழுக்கள் சோதித்து வருtதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்