பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (30ஆம் திகதி) வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலதொட்டெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் நேற்று (30ஆம் திகதி) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 வயது, 32 மற்றும் 56 வயதுடைய வெலிமடை மற்றும் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து அகழ்வு உபகரணங்கள் மற்றும் பலி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



