சுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் வனுவாட்டு கடற்கரைக்கு சற்று தொலைவில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்டதாக ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:
செய்திகள்



