நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு...!

  

tamil lk news

தலவாக்கலை - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவர் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அமைந்துள்ள பிரதான அணைக்கட்டுக்கு அருகில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 நீர்த்தேக்கத்தின் கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்தில் வைத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.



 சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்