Srilanka News Tamil
சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியான லக்ஷபான தோட்ட எமில்டன் பகுதியில் திடீர் என வனப் பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது, என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தீ பரவலின் போது மூன்று ஏக்கர் வனப் பகுதி நாசமடைந்து உள்ளது. மேலும் தீ பரவிவருகிறது.
இத் தீயை கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும், கடும் வெப்பமான வானிலை காரணமாக அருகில் செல்ல முடியாத நிலையில் உள்ளது எனவும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
.