30 ஆண்டுக்கு முன் இறந்த சிசு - 75 வயது மூதாட்டியின் வயிற்றில் ஸ்கானில் வெளிவந்த அதிர்ச்சி!

  மூதாட்டி ஒருவரின் வயிற்றில் 7 மாதமாக உயிருடன் இருந்த இறந்த சிசு ஒன்று கல் போன்ற வடிவில் இருந்துள்ளது ஸ்கான் சிகிச்சையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிச் சம்பவம் அல்ஜீரியாவில் நிகழ்ந்துள்ளது. 


Tamil lk News


இது தொடர்பில் தெரியவருகையில், 



வயிற்று வலி காரணமாக 75 வயது மூதாட்டி ஒருவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.  குறித்த  மூதாட்டிக்கு மருத்துவர்கள் சி.டி.ஸ்கேன்  சிகிச்சையை மேற்கொண்டனர். 




மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் மூதாட்டியின் வயிற்றில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிசு ஒன்று, கல்சிய கல்லாக மாறியிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. 




மூதாட்டியின் வயிற்றில் சுமார் 7 மாதம் வரை உயிருடன் இருந்து  அந்த சிசு உயிரிழந்துள்ளது. வயிற்றுக்குள் உயிரிழந்த சிசு கல் போன்ற வடிவில் இருப்பதை ஸ்கான் பரிசோதனையில் கண்டறிந்தனர். 


News Thumbnail
வவுனியாவில் பற்றி எரிந்த வீடு...!



குறித்த சிசு தாயின் கர்ப்பப்பைக்கு  வெளியே கர்ப்பம் தரித்து, இரத்த ஓட்டம் கிடைக்காததால் உயிரிழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


உடல் தனது இயற்கையான பாதுகாப்பு சக்திகளை பயன்படுத்தி, இறந்த சிசுவை கல்சியமாக மாற்றி, கல் போல ஆக்கியுள்ளது.  இதனால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படாமல்  இருந்துள்ளது. 




இது உடலின் அற்புதமான தற்காப்பு முறையை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. 


News Thumbnail
இன்ஸ்டாகிராம்- பேஸ்புக் பயனர்களுக்கு ஏற்பட்ட திடீர் அச்சுறுத்தல்!!



இதேவேளை - கடந்த 2013ஆம் ஆண்டு கொலம்பியாவில் ஒரு மூதாட்டியின் வயிற்றில் 40 ஆண்டுகளாக இருந்த சிசு கல்லாக மாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்