இலங்கையில் இன்று சம்பவித்த மற்றுமொரு கோர விபத்தில் பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - துங்ஹிந்த பகுதியில் சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்மைக்காலமாக சுற்றுலா செல்லும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில் மற்றுமொரு விபத்து இன்று பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.