இலங்கை(Srilanka) சந்தையில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

திடீரென யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! ; சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்!
இது தொடர்பாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் விசாரித்தபோது, அதனை நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.