பாலர் பாடசாலைச் செல்லும் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து! பெற்றோரே அவதானம்

 

Tamil lk News

 இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் சிறு குழந்தைகள் அதிகமான சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொண்டு வருவதாக வைத்தியர் இனோகா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சின் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 



சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வைத்தியர் இனோகா இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.


 இது கறித்து வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், 


வயது வந்த ஒருவர் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய  சர்க்கரையின் அளவில் இருந்து அரைவாசியான சர்க்கரை அளவே சிறியவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.



 எனவே இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடத்தில் காணப்படுகின்றது. 


பெற்றோர்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் இரண்டு வகையான காய்கறிகள், இரண்டு வகையான பழங்கள் மற்றும் ஒரு வகை  கீரை போன்றவற்றை வழங்க வேண்டியது அவசியம் என்பதோடு குழந்தைகளை ஆபத்திலிருந்து தற்காக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Tamil lk News


 எனினும், தற்போது சிறுவர்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக காணப்படுகின்றது. 



குறிப்பாக,  பாலர் பாடசாலைகளின் கல்வி கற்கும் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் அதிமானோர் சர்க்கரைப் பானங்களை அருந்துவதற்கு பழகியுள்ளனர்.


பாடசாலை செல்லும் போதும் திரும்பி வரும் போது இந்த பானங்களை அருந்துவது அதிகரித்து காணப்படுகின்றது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்