செம்மணி மனிதப் புதைகுழியில் இதுரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!!

 

Tamil lk News

 யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.




இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 36 வது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது.




அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.




அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முதலாவதாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்திலே 09 மனித என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.




இதனடிப்படையில் 164 என்புத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்