வடக்கு உட்பட பல பகுதிகளில் மின்னல் எச்சரிக்கை!!

  

Tamil lk News

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 


குறித்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.



தற்காலிகமாக பலத்த காற்று வீசும் போது இப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.



மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்