நாட்டில் இடம்பெறும் கொலை கொள்ளை போதைப்பொருள் ஆகிய சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான விசிட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை வரவழைத்து விசிட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கொலைகள் மற்றும் போதைப்பொருள்களை ஒடுக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொடூரமான மற்றும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் மற்றும் அது தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சர் இன்று (டிச. 16) காலை பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரிகளை அழைத்திருந்தார்.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரிகள்
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனபால, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர். பிரசாத் ரணசிங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டா சில்வா, அமைச்சு ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுமித் குணரத்ன உட்பட இலங்கை பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
போதைப்பொருள் அகற்றும் நடவடிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களின் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் முழு சமூகத்திற்கும் சுமையாக மாறியுள்ளதால், இந்த பேரழிவு நிலையை ஒடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நபர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற குற்றவாளிகளை சமூகத்திலிருந்து அகற்றுமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் தீரன் அலஸ் உத்தரவிட்டார் பிறப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.




