எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 1ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சில இடங்களில்150 மில்லிமீட்டர் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடும் மழை மற்றும் பலத்த காற்று மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

.gif)


